M. K. Alagiri Announces - " I will reveal my plan in three months from now "


Red Pix View      Yooutube View

மு.க. அழகிரி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது நான் மதுரையில் 1980 ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தேன் அப்போது எனக்கு அறிமுகமாகிய நண்பர்கள் எல்லாம் இங்கே இருக்கிறீர்கள் அப்போது சாதாரண தொண்டர்களாக இருந்தவர்களை எல்லாம் கட்சிப் பதவியில் அலங்கரிக்க செய்தேன் அந்த வகையில் சாதரண தொண்டனாக அறிமுகமாகிய கோபிநாதனை படிப்படியாக உயர்த்தி மண்டலத் தலைவர் பதவியில் அமர்த்தினேன்.

அவரது மனைவியை மேயர் ஆக்கினேன் அவரை போன்று எனக்கு நிறைய தம்பிமார்கள் இருக்கிறார்கள். இப்போது பல இன்னல்கள் சோதனைகளை கடந்து இங்கே கூடியிருக்கிறோம். 2001ம் ஆண்டு முதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். அடுத்து 2013ல் மீண்டும் சோதனை வந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன் கட்சியில் இது போன்று பல சோதனைகளை தாங்கி கொண்டேன். ஆனால் ஒரு பழிச்சொல்லை என்னால் தாங்க முடியவில்லை. அந்த பழிச்சொல்லால் என் இதயம் கனக்கிறது.

இங்கே பேசிய தம்பிமார்கள் அழகிரி அடுத்த முதல்வராவார் அடுத்த பிரதமராவார் என்றெல்லாம் பேசினார்கள் நான் எப்போதுமே பதவிக்கு ஆசைப்படவில்லை எனக்கு வரும் பதவியை இன்னொரு தம்பிமார்களுக்கு கொடுத்து அழகு பார்ப்பவன் நான். தென் மாவாட்ட அமைப்புச் செயலாளர் பதவியை எனக்கு கொடுத்த கலைஞர். நான் கேட்காமலேயே என்னை எம்.பி ஆக்கினார். மத்திய அமைச்சராக்கினார்.

அந்த பதவி மூலம் நிறைய சாதனைகளைச் செய்துள்ளேன். அந்த பதவிகளை எல்லாம் விட எண்ணற்ற தம்பிமார்களின் இதயத்தில் இருக்கவே விரும்புகிறேன். நான் வியூகம் வகித்திருக்கிறேன் அடுத்த 2 , 3 மாதத்தில் வெளியிடுவேன் என்றெல்லாம் பேசிய தம்பிமார்கள் என்ன வியூகம் வைத்திருக்கிறேன் எனறு அறிய ஆவலாய் கேட்டார்கள் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது மூன்று மாதம் காத்திருங்கள் என்பதுதான் என்று கூறினார்.

No comments: